Friday 19 August 2011

காந்திக் குல்லாய் அணிந்து

குருவிக்கூட்டைக்
கலைக்காதீர்கள்
குரங்குகள்
உண்ணாவிரதம் இருந்தன

தவளைகளைக்
காப்பாற்றுங்கள்
பாம்புகள் குரல் எழுப்பின

பசுவைக் காக்க
பசுந்தோல் போர்த்திய
புலிகள்
போராட்டம் நடத்தின

குண்டு வைக்கும்
காவித் தீவிரவாதிகள்
ஆதரவில்
காந்திக் குல்லாய் அணிந்து
ஊழலுக்கு எதிராக
அகிம்சைப் போராட்டம்
நடத்தினர்

1 comment:

தமிழ் ஓவியா said...

"குண்டு வைக்கும்
காவித் தீவிரவாதிகள்
ஆதரவில்
காந்திக் குல்லாய் அணிந்து
ஊழலுக்கு எதிராக
அகிம்சைப் போராட்டம்
நடத்தினர் "

உண்மைய உரக்கச் சொல்லியுள்ளீர்கள்.ஆனால் பார்ப்பன ஊடகங்கள் உண்மைகளை ஊழல் செய்து செய்தியாக வெளியிட்டு மக்களை மூளைச் சலவை செய்து வருகின்றன. அதற்கு மக்கள் பலியாகி வருகின்றனர். உண்மையான உண்மைகளை மக்கள் அறியும் போது அக்கிரகார அக்கப்போர் செய்தித்தாள்கள் செல்லாக்காசாகி விடும்.

தொண்டு தொடர்க>>>>