Sunday 7 August 2011

டால்பின் விலங்கா ?



கேளிக்கையாய்
டால்பினைக் கொல்லுதல்
வேடிக்கையாம் டென்மார்க்கில் !

வெள்ளை நிறக் கடல்
சிவப்பு நிறமாய்
மாறி நிற்கும் கொடுமை பாருங்கள் !

அறிவானது என்பார்கள்
விலங்குகளில் டால்பினை !

கத்தியால் குத்தி குத்தி
இரத்தம் வடியும் கொடுமையை
பார்த்து இரசிக்கும்
இவர்கள் விலங்கா ?

வழி தெரியாமல் செத்து
மடியும் டால்பின் விலங்கா ?
விளங்கவில்லை உலகில் !
வா. நேரு

No comments: