Thursday 12 April 2012

பகுத்தறிவாளர் கழகம் துணை நிற்க வேண்டும்

தஞ்சை, ஏப்.12- 5.4.2012 அன்று மாலை தஞ்சை கீழராச வீதி பெரியார் இல்லத்தில் தஞ்சை மாவட்ட ப.க. கலந்து ரையாடல் கூட்டம் நடைபெற்றது.




தொடக்கத்தில் கட வுள் மறுப்புக்கூறி அனை வரையும் வரவேற்று, கூட்ட நோக்கத்தினை விளக்கியும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாளை சிறப்பாக நடத்த தோழர்கள் நல்ல ஆலோசனை வழங்க வேண்டும் எனக்கூறிய தைத்தொடர்ந்து தஞ்சை ஒன்றிய ப.க. தலைவர்ஆசிரியர் ச.அழகிரி, ஒன்றிய ப.க. அமைப்பாளர் ஆசிரியர் பொ.ராஜீ,அம்மா பேட்டை ஒன்றிய ப.க. அமைப்பாளர் ஆசிரியர் இரா.பன்னீர்செல்வம், வெ.ரவிக்குமார், ஆசிரி யர் தங்கவெற்றிவேந்தன், நகரச் செயலாளர் கரந்தை முருகேசன், டேவிட், திருவையாறு ஒன்றிய ப.க. தலைவர் கோ.கவு தமன், மாவட்ட மாண வரணி செயலாளர் த.பர் தீன், பெரியார் பெருந் தொண்டர் சா.தண்டா யுதபாணி, புலவர் அன் பரசு, ஒரத்தநாடு ஒன்றிய தலைவர் ஆ.இலக்கு மணன், செயலாளர் அ. அருணகிரி, அம்மாப் பேட்டை ஒன்றிய அமைப் பாளர் செ.காத்தையன், தஞ்சை ஒன்றிய செய லாளர் ஆட்டோ ஏகாம் பரம், ஆசிரியர் மா. இலக்குமணசாமி, மாவட்ட இணை செய லாளர்ச.சந்துரு, மாவட்ட து.தலைவர் ப.தேசிங்கு, மாவட்ட செயலாளர் த.ஜெகநா தன், மண்டல செயலா ளர் மு.அய்யனார், மாவட்ட தலைவர் வழக் குரைஞர் சி.அமர்சிங், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக பெரி யார் உயராய்வு மய்யத் தின் இணை இயக்குநர் கழகப் பேச்சாளர் முனை வர் அதிரடி க.அன்பழ கன், மண்டலத் தலைவர் வெ.செயராமன், மாவட்ட ப.க. தலைவர் ஆசிரியர் ந.காமராசு, மாநில மாணவரணி செயலா ளர் கலைச்செல்வி அமர் சிங் ஆகியோர் உரைக் குப்பின் மாநிலஇளை ஞரணி செயலாளர் தஞ்சை இரா.செயக்குமார், உரையில் எதிர்கால இளை ஞர்களை இயக்கத்திற்கு ஈர்க்கும் சக்தி ஆசிரியர் களுக்குதான் உண்டு. மாணவர்களிடையே பாடம் நடத்தும்போது பகுத்தறிவுக் கருத்துக ளையும் கூறி மாணவர் களின் வழியை நல்வழிப் படுத்தி இயக்கத்திற்கு அறிமுகப்படுத்த வேண் டும் என்றார். தொடர்ந்து நிகழ்ச் சிக்கு முன்னிலை வகித்த மாநில ப.க. பொதுச் செயலாளர் வடசேரி வ. இளங்கோவன், உரை யாற்றும் போது, தந்தை பெரியார் காலம் முதல் நம் தமிழர் தலைவர் காலம் வரை இயக்க தலைமை எந்தப் பணியை அறிவித்தாலும், அதை உடனே நடைமுறைப் படுத்தும் மாவட்டம் தஞ்சை மாவட்டம்தான். அப்பெருமையை தக்க வைத்துக்கொண்டு புரட்சிக் கவிஞர் விழாவை நடத்தி எழுச்சியை ஏற் படுத்த வேண்டும் என்று கூறினார்.
வா.நேரு உரை

கூட்டத்திற்கு தலைமை வகித்த மாநில ப.க. தலைவர் முனைவர் வா.நேரு உரையாற்று கையில் திராவிடர் கழ கம் எந்தப்பணியை செய் தாலும் அவற்றுக்கு துணையாக இருந்து நம் அமைப்பு செயல்பட வேண்டும். நாம் நேரடி யாக களப்பணி ஆற்ற முடியவில்லை என்றா லும், விடுதலை, உண்மை, போன்ற நம் இதழ் களுக்கு சந்தா சேர்த்தல், மாதாந்திரக் கூட்டம் நடத்தி நம் தோழர்களின் சிந்தனையை கூர்மைப் படுத்திக் கொள்ள வேண் டும் தமிழர் தலைவர் அவர்களின் வழிகாட்டு தலின்படி, பார்ப்பன மூடப்பிரச்சாரத்தை முறியடிக்க வேண்டும். நம் இயக்க வெளியீடு களைப் பரப்ப வேண் டும். தமிழரின் கலை, இலக்கியத்தை வளர்க்க மாணவர்களிடையே பேச்சுப்போட்டியும், கட்டுரைப்போட்டியும் நடத்திட வேண்டும். புரட் சிக் கவிஞர் விழாவை நடத்திடவும், விடுதலை இதழ் வளர்ச்சி நிதியை யும் திரட்டி மாநில பகுத் தறிவாளர் கழகத்திற்கு தஞ்சை மாவட்ட பகுத் தறிவாளர் கழகம் உறு துணையாக இருக்க வேண்டும் என கூறினார்.

கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங் களை மாநில மாணவரணி செயலாளர் ம.திரா விட எழில் வாசித்தார். தஞ்சை நகர தி.க. தலைவர் வ.ஸ்டாலின் நன்றி கூறினார். நிகழ்ச் சியில் கலந்துகொண்ட கழகப் பேச்சாளர் முனை வர் அதிரடி அன்பழகன், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் செயல்படும் பெரியார் உயராய்வு மய்யத்தின் துணை இயக்குநராகப் பொறுப்பேற்றதைப் பாராட்டியும், மாநில ப.க. தலைவர் வா.நேரு அவர்கள் முனைவர் பட் டம் பெற்றதைப் பாராட்டியும், இருவருக் கும் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர் சிங் அவர்கள் பட்டாடை போர்த்தி பெருமைப் படுத்தினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பொறியா ளர் ந.நேரு, மாவட்ட மாணவரணி து.தலை வர் இரா.மோகன்தாஸ், திருவையாறு ஒன்றிய அமைப்பாளர் இரா. மதுரகவி, மாவட்ட மக ளிரணி அமைப்பாளர் ச.அஞ்சுகம், யோகி ராச மாணிக்கம், பா.நரேந் திரன், அ.பெரியார்செல் வன், கா.இமயவரம்பன், உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.

தீர்மானங்கள்

1. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர் களின் பிறந்த நாள் விழா வினை மிகச்சிறப்பாகக் கொண்டாடும் வகை யில் வரும் 28.4.2012 அன்று மாலை தஞ்சையில் பட் டிமன்றம், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி, தமிழர் கலை, பண்பாட்டு புரட்சி நாளாக கொண்டாடிட தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் விழா நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

2. பகுத்தறிவாளர் கழகத்த்தின் சார்பில் அறிஞர் பெருமக்களை அழைத்து மாதாந்திர சிறப்புக்கூட்டம் நடத்து வது என முடிவு செய் யப்படுகிறது.

3. பகுத்தறிவாளர் கழ கப் பொறுப்பாளர்கள் அனைவரும் விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மார்டன் ரேசன லிஸ்ட் இதழ்களுக்கு சந்தா சேர்ப்பது என முடிவு செய்யப்படுகிறது.

4. தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவினை யொட்டி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, கட்டு ரைப்போட்டி, ஓவியப் போட்டி நடத்துவது என முடிவு செய்யப்படு கிறது.

5. ராமன் பாலத்தை தேசிய சின்னமாக அறி விக்கக்கோரி, தமிழக முதல்வர் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் அவர்களுக்கு கடிதம் எழுதியதை கண்டிக்கும் வகையில், அதற்கு மறுப்பு தெரிவித்து பிரதமர் அவர்களுக்கு தந்தி அல் லது மெயில் அனுப்ப வேண்டும் என அறிவித்த திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் கட்டளையை ஏற்று நடைமுறைப்படுத்துவது என முடிவுசெய்யப்படு கிறது.

No comments: