Friday 18 May 2012

அய்.அய்.டி. நுழைவுத்தேர்வு மாற்றமும் - தமிழக மாணவர்களும் (1)


அய்.அய்.டி. நுழைவுத்தேர்வு மாற்றமும் - தமிழக மாணவர்களும் (1)(வா. நேரு, தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்)  

இந்தியாவில் இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் (அய்.அய்.டி.) 15 உள்ளன. ஆண்டுதோறும் இந்த நிறுவனங்களில் மாணவ மாணவிகள் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகள் நடைபெறுகின்றன.  IIT-JEE   என்று கூறப்படும் இந்த நுழைவுத் தேர்வு முறைகளில் சில மாற்றங்களை 2013-இல் கொண்டு வரலாம் என்ற அடிப்படையில் மத்திய அரசு இரண்டு குழுக்களை அமைத்தது. அந்த குழுக்கள் சில பரிந்துரைகளை அளித்துள்ளனர்.

அதில் முக்கியமான ஒன்று +2-ல் எடுக்கும் மதிப்பெண்களுக்கு 40 மதிப் பெண்களும், மீதம் உள்ள 60 மதிப்பெண் களுக்கு நுழைவுத்தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களையும்  சேர்த்து அதன் அடிப்படையில் மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்ப தாகும். மேலும் சில பரிந்துரைகளையும் அவர்கள் அளித்துள்ளார்கள். அய்.அய்.டி. நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள் சங்கங்கள் புதிய முறையை எதிர்த்திருக்கிறார்கள்.

பழைய முறையே நீடிக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். அய்.அய்.டி கான்பூரின் செனட்டும், டெல்லி,மும்பை போன்ற அய்.அய்.டி. நிறுவன பேராசிரியர்கள் கூட்டமைப்பு களும் புதிய முறை கூடவே கூடாது என்று அறிக்கை கொடுத்திருக்கின்றார்கள்.

நமது மரியாதைக்குரிய பேராசிரியர், பல முனைவர்களை உருவாக்கிய முனைவர் வசந்தா கந்தசாமி அவர்கள், அய்.அய்.டி. சென்னை நிறுவனத்தில் தான் பட்ட துன்பங்களை எல்லாம் நமது மேடை களிலே எடுத்துக் கூறியிருக்கிறார்கள். அய்.அய்.டி. நிறுவனத்தில் படிப்பவர்கள் மட்டுமல்ல, பணி புரியும் பேராசிரியர்கள் பலரும் பார்ப்பனர்களே.

எப்படி நீதித்துறையில் இன்னமும் அவாளின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறதோ, அவ்வாறே  அய்.அய்.டி- நிறுவனத்தில் அவாளின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறது.

அவாளின் சங்கம்தான் புதிய முறை வேண்டாம் என்று கூறியிருக் கிறது. ஏன் வேண்டாம் புதிய முறை என்று சொல்கின்றபோது, +2 வில் வாங்கும் மதிப்பெண்ணை கணக்கிலேயே எடுக்கக் கூடாது, +2-வில் வாங்கும் மதிப் பெண் ணுக்கு 40 மதிப்பெண்கள் என்று கொடுத் தால் தரம் கெட்டுவிடும், தகுதி போய் விடும், திறமை போய்விடும் என்று சொல் கின்றார்கள்.

பெருந்தலைவர் காமராசர் சொன்னதுதான் ஞாபகம் வருகின்றது, உன் தகுதி, திறமையும் தெரியும், உங்கப் பன் தகுதி, திறமையும் தெரியும் என்று. தந்தை பெரியார், பாபாசாகிப் டாக்டர் அம்பேத்கர் போன்றவர்களின் முயற்சி யால் அய்.அய்.டி நிறுவனங்களில் தாழ்த் தப்பட்டோருக்கு(15), மலைவாழ் மாணவர் களுக்கு(7.5) இட ஒதுக்கீடு உள்ளது.

மண்டல் குழுவின் அமலாக்கத்தால், தன்னுடைய பிரதமர் பதவி போனாலும் பரவாயில்லை, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத் துவேன் என்று சமூக நீதிக்காவலர் வி.பி.சிங் அவர்கள் அமல்படுத்தியதால், மண்டல் குழுவை அமல்படுத்தவேண்டும் என்பதற்காக போராட்டங்களும், மாநாடு களும் திராவிடர் கழகம், திராவிடர் கழகத் தலைவர்  மானமிகு கி.வீரமணி அவர் களின் வழிகாட்டுதலில் நடத்திய காரணத்தால்  27 சதவீத இடஒதுக்கீடு அய். அய்.டி. நிறுவனங்களில் உள்ளது. ஆனால் இதிலும் ஒரு பொடியை பார்ப்பனர்கள் வைத்துள்ளார்கள்.

மொத்தம் 10000 மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றால் 1500 இடங்கள் தாழ்த்தப்பட்டோருக்கு, 750 இடங்கள் மலை வாழ் மாணவர் களுக்கு, 2700 இடங்கள் பிற்படுத்தப் பட்டோருக்கு ஒதுக்க வேண்டும். இதில் 1500 இடங்களுக்கு தகுதியான (?) தாழ்த்தப்பட்டோர், தகுதியான (?) மலைவாழ் மாணவர்கள் கிடைக்கவில்லை என்றால் அதனை நிரப்பமாட்டார்கள், அடுத்த வருடம் நிரப்புவார்கள், ஆனால் பிற்படுத்தப்பட்ட 2700 இடங்களில் தகுதியான  மாணவர்கள் கிடைக்கா விட்டால் (பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கு இந்த வருமான வரம்பு என்னும் இடையூறும் இருக்கிறது) பொதுப்பிரிவிலிருக்கும் மாணவர்களை எடுத்து நிரப்பி விடுவார்களாம். .

ஊருக்கு ஊர் சாதிக் கணக்கெடுப்பு நடத்துவது போல 15 அய்.அய்.டி. நிறுவ னங்களில் வேலை பார்க்கும் பேராசிரி யர்கள், அலுவலர்கள், மாணவ, மாண விகள் அனைவரையும் சாதி வாரி கணக் கெடுப்பு நடத்த வேண்டும், அப்போது தான் மக்கள் தொகையில் 3 சதவீதம் உள்ள பார்ப்பனர்கள் எவ்வளவு இடத்தை அய்.அய்.டி நிறுவனங்களில் ஆக்கிர மித்து வைத்து உள்ளார்கள் என்பது தெரிய வரும்.

அண்மையில் மத்திய மனித வளத்துறை அமைச்சர் திரு.கபில்சிபல்   அவர்களை சந்தித்த சூப்பர் 30 நிறு வனத்தின் நிறுவனர் ஆனந்த், அய். அய்.டி. நுழைவுத் தேர்வினை எளிமை யாக்க வேண்டும்.....தொடரும் 
நன்றி : விடுதலை 15-5-2012




No comments: