Tuesday 30 October 2012

பரிசளிப்பு விழா


மதுரை மாநகர் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பெரியார் பிறந்த நாளினையொட்டி நடத்தப்பட்ட பெரியார்-1000 வினா-விடைப் போட்டியின் பரிசளிப்பு விழா
மதுரை, அக். 29- 26.10.2012  மாலை 5 மணிக்கு, மதுரை ஆரத்தி விடுதியில் நடைபெற்ற கழகச் சொற் பொழிவா ளர்கள் கூட்டத்தின் தொடக்கத்தில்  நடைபெற்றது. திராவிடர் கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொதுச்செயலாளர்கள் முனைவர் துரை.சந்திரசேகரன், இரா.ஜெயக் குமார் மற்றும் கழக முன்னணியர் முன்னிலையில், போட்டியில் வெற்றி பெற்ற  மாணவ மாணவியர்க்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பரிசுத் தொகையும் சான்றிதழும் வழங்கி வாழ்த்தினார்கள்.
முதல் பரிசு (ரூ.அய்ந்தாயிரம்); மு.ஜெனிபர்  (மகபூப் பாளையம் மகளிர் அரசு மேல்நிலைப்பள்ளி, மதுரை), இரண்டாம் பரிசு (ரூ.மூவாயிரம்); அ.சிவலிங்கம் (நீதிராஜன் பாரதி உயர்நிலைப்பள்ளி, மதுரை), மூன்றாம்  பரிசு (ஒவ்வொருவருக்கும் ரூ.இரண்டாயிரம்) 1.சே.அபியா (ஈ.வெ.ரா. நாகம்மையார் மாநகராட் சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மதுரை), 2.அ.பூஜா, 3.ஹ.ஹசீனா (விப்ஜியார் மெட்ரிக் பள்ளி, மதுரை) ஆகியோர் பரிசினைப் பெற்றனர்.
தென்மாவட்டத் திராவிடர் கழகப் பிரச்சாரக்குழுத்  தலைவர் தே.எடிசன் ராசா, பொறியாளர் சி.மனோகரன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர் முனைவர் வா. நேரு, பேரா.முனைவர் நம்.சீனிவாசன்,  ப.க மாநகர் மாவட்ட தலைவர் சே.முனியசாமி, மதுரை மண்டலத்  தி.க  தலைவர் வே.செல் வம், மதுரை மண்டல தி.க செயலாளர் மீ.அழகர்சாமி, மதுரை மாநகர் தி.க தலைவர் க.அழகர், மதுரை மாநகர் தி.க. செயலாளர் இரா.திருப்பதி, மதுரை புற நகர் மாவட்டத் தலைவர் மா.பவுன்ராசா, மாவட்ட செயலாளர் அ.வேல்முருகன்,
மதுரை மாநகர் ப.க. துணைச்செயலாளர்   பா.சடகோபன், மதுரை மாநகர் ப.க.துணைத்தலைவர் எல்.அய்.சி. செல்ல.கிருட்டிணன், ப.க ஆர்வலர் இரா.பழனிவேல் ராஜன், கனி, ஆசிரியர்கள்  போ.சேகரன், திருப் பரங்குன்றம் மணி, பழக்கடை அ.முரு கானந்தம், போட்டோ இராதா, விராட்டிபத்து சுப்பையா, வடக்குமாசி வீதி சிவா, மருத்துவர் அன்புமதி  ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியினை மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், வினாடி வினாப் போட்டியின் மதுரை ஒருங்கிணைப் பாளருமாகிய சுப.முருகானந்தம்  தொகுத்து வழங்கினார். மிகப்பெரிய வாய்ப்பாக புதுமையாக நடத்தப் பட்ட பெரியார் ஆயிரம் வினா - விடைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகள் பெற்றோரோடு வந்திருந்து தந்தை பெரியாரைத் தெரிந்துகொண்டதால் பரிசினையும் சான்றிதழையும்  தமிழர் தலைவரிடம் பெற்று மகிழ்ச்சியுடன் சென்றனர்.

No comments: