Saturday 2 February 2013

ஏய்த்துப்பிழைக்கும் தொழிலே -சரிதானா (2)

                                            ஏய்த்துப்பிழைக்கும் தொழிலே -சரிதானா (2)

திரு விளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு என்ன கிடைக்கும்? அது கிடைக்கும், இது கிடைக்கும் என்று விளம்பரத்தை அள்ளி விடுகின்றார்கள். உண்மையா, திருவிளக்குப் பூஜை செய்து, பிரார்த் தனை செய்தால் எல்லாம் கிடைத்து விடுமா? + 2, மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நெருங்குகின்றன, சில  ஊடகங்கள் திட்டமிட்டு , தேர் வில் அதிக மதிப்பெண் பெற அந்தக் கடவுளுக்கு பிரார்த்தனை செய் யுங்கள், இந்தக் கடவுளுக்கு பிரார்த் தனை செய்யுங்கள் என்று மாணவ, மாணவிகளுக்கும், அவர்தம் பெற்றோ ருக்கும் உபதேசம் செய்கிறார்கள், அதனைப் போலவே மற்ற மதத்தினைச் சேர்ந்தவர்களும், தேர்வு நேர சிறப்பு பிரார்த்தனை கூட்டங்களை ஏற்பாடு செய்கிறார்கள்.

                  நம்மைச்சுற்றிலும் ஒரே பிரார்த்தனை மயமாக இருக்கிறது. இந்த நிலையில் இரண்டு புத்தகங் களைப் படித்தேன். அதனை உங்க ளோடு பகிர்ந்து கொள்கின்றேன், ஒரு நூல் திராவிடர் கழகத் தலைவர் , ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்  "பிரார்த்தனை மோசடி" என்னும் நூல் ஆகும். இது ஒரு திராவிடர் கழக வெளியீடு ஆகும், தந்தை பெரியார் அவர்களின் 'பிரார்த்தனை ' என்னும் கட்டுரைக்கு பொழிப்புரையாக, விரிவுரையாக வந்துள்ள நூல் இந்த நூல்." பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும் அவர் சர்வவல்லமையும் , சர்வ வியா பகமும் சர்வமும் அறியும் ஞானமும் உடையவர் என்பதும், அப்படிப்பட்ட அக்கடவுளை வணங்குவதால் ஒரு வனுக்கு வேண்டிய சகல காரியத்திலும் சித்தி பெறலாம் என்பதுமானைவை தான் கருத்தாயிருக்கிறது" என்று தந்தை பெரியார் தன் கட்டுரையில் கூறுவதைக் குறிப்பிட்டு விளக்கம் கொடுக்கின்றார் ஆசிரியர்.
                            பிரார்த் தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாற்றுப்பெயர் சொல்ல வேண்டு மானால் 'பேராசை ' என்றுதான் சொல்ல வேண்டும். பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது, படித்துப்பாஸ் செய்ய வேண்டியவன் பிரார்த்தனையில் பாஸ் செய்வது என் றால், பணம் வேண்டியவன் , பிரார்த் தனையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால், 'மோட்சத்துக்கு' போக வேண்டும் என்கிறவன் பிரார்த் தனையில் மோட்சத்துக்குப் போக வேண்டும் என்றால், இவைகளுக்கெல்லாம் பேராசை என்று மட்டும் சுருக்கமாகச் சொல்வ தோடு இல்லாமல் , வேலை செய்யாமல் கூலி கேட்கும் பெரும் சோம்பேறித்தனமும் மோசடியும் ஆகும் என்று சொல்லுவது தான் மிகப்பொருத்த மாகும். பேராசையும், சோம்பேறித்தனமும், ஏமாற்றும் தன்மை யும் இல்லாவிட்டால் பிரார்த்தனைக்கு இடமே இல்லை - (பக்கம் 11) என்று பிரார்த்தனை என்பதன் அடித்தளத்தை நமக்கு கோடிட்டு காட்டி அதற்கு பல் வேறு எடுத்துக்காட்டுகளை மேற்கண்ட புத்தகத்தில் கூறுகின்றார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 
                       பிரார்த் தனை என்பதனை சிலர் முழு ஈடு பாட்டுடன் கடவுளிடம் வேண்ட வேண்டும். அப்பொழுதுதான் அது நடக்கும் என்று சொல்கின்றனர். இது எவ்வளவு பெரிய ஏமாற்றும் தன்மை என்பதற்கு இணைய தளத்தில் ஒரு ஆதாரம் கிடைத்தது. இதோ, அது "ஆதி சங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம் செய்தால் ஏழை வீட்டில் தங்க மழை பெய்கிறது. முத்துசாமி தீட்சிதர் அமிர்தவர்ஷனி ராகத்தில் அம்பாளைப் பிரார்த்தித்தால் வறண்ட பூமியில் மழை பெய்கிறது. ஞான சம்பந்தர் பதிகம் பாடினால் இறந்துபோன பெண் அஸ்திக் கலச சாம்பல் எலும்பிலிருந்து எழுந்து வருகிறாள். நாமும் அதே ஸ்தோத்திரம் , பதிகம் பாடினால் ஏன் நமது பிரார்த்தனைகள் நிறைவேறு வதில்லை?
இதோ, கீழே இதற்கான விடை உள்ளது.
கிரகண நாட்களில் பிரார்த்தனை செய்தால் ஏன் பலன் பன் மடங்கு அதி கரிக்கிறது? சிவ ராத்திரி, வைகுண்ட ஏகாதசி, பிள்ளையார் சதுர்த்தி, துர்காஷ் டமி, ஜன்மாஷ்டமி, ராமநவமி ஆகிய நாட்களில் பூஜை செய்தால் ஏன் பல மடங்கு பலன் கிடைக்கும் என்று நமது மத நூல்களும், ஆச்சார்யர்களும் கூறுகிறார்கள்?
இதோ கீழே இதற்கான விடை உள்ளது.
இந்திய விண்கலம் சந்திரனுக்குச் சென்றதை எல்லோரும் அறிவர். அமெ ரிக்க ரஷிய விண்கலங்கள் செவ்வாய், சனி கிரகங்களுக்கு அவ்வப்போது ஏவப் படுகின்றன. பல விண்கலங்களும் பாதியில் கோளாறு ஆகி விழுகின்றன. ஏன் சில போயின, சில வெடித்து விழுந்தன? தவறான நேரம் அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு விண்கலம் ஏவப்படும் முன்பாக பல ஆண்டுகள் திட்டமிடுவார்கள். என்ன என்ன ஏற்பாடுகள் தேவை தெரியுமா?
ஒரு ஏவுதளம் வேண்டும். இது கடலுக்கருகில் அல்லது மனித நடமாட் டம் இல்லாத பாலவனத்தின் பக்கத் தில் இருக்க வேண்டும். அதுவும் நில நடுக் கோட்டுக்குப் பக்கத்தில் இருக்க வேண்டும். இதற்குப் பின் எந்த கிரகத்துக்கு அனுப்புகிறோமோ அதன் பாதை, வேகத்தைக் கவனித்து, அது பூமிக்கு அருகில் வரும் போது ஏவ வேண்டும். விண்வெளியில் அதிக எரிபொருள் செலவில்லாமல் பயணம் தொடர ஒவ்வொரு கிரகத்தின் ஈர்ப்பு உந்து விசையைப் (ழுசயஎவையவடியேட ளடபேளாடிவ) பயன்படுத்த உரிய தருணத்தில் அனுப்ப வேண்டும். இது தவறினால் சில நேரம் ஆண்டுக் கணக்கில் கூட காத்திருக்க வேண்டும்.....(தொடரும் )

நன்றி : விடுதலை (31-1-13)

No comments: