Saturday 28 September 2013

நிகழ்வும் நினைப்பும்(3)

நேற்று(27.9.13) வந்த ஒரு மின்னஞ்சல் மூலமாக journeyfree.org என்னும் வலைத்தளத்தைப் பார்த்தேன், படித்தேன். டாக்டர் மர்லின் வினெல் என்பவரின் வ்லைத்தளம் அது. மத நம்பிக்கைகளிலிருந்து அல்லது மதங்களிலிருந்து விடுபடுவது எப்படி என்பதில் சிறப்பு சிந்தனையாளர் அவர் . கடந்த 20 ஆண்டுகளாக மனித வள மேம்பாட்டுத்துறையில் சிறப்பாகப் பணியாற்றும் அவர் மனித வள் மேம்பாட்டில் , அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் டாக்டரேட் பட்ட்ம் பெற்றிருக்கின்றார். பிறப்பால் கிறித்துவரான அவர் இளம் வய்தில் பைபிள் படிப்பிற்கு மற்றவர்களைப்போலவே அனுப்பப்பட்டிருக்கின்றார், படித்திருக்கின்றார். பிரச்சனைகள் வந்தபோது, கடவுளிடத்தில் ஒப்படைத்து விடு,பைபிளை இன்னும் நன்றாகப் படி என்ற சொன்னதால் மீண்டும் மீண்டும் பைபிளைப் படித்திருக்கின்றார்,.பிரச்சனைகள் தீரவில்லை.  பின்னர் பிரச்சனைகளின் தீர்வு கடவுள் நம்பிக்கையில்  இல்லை, மாறாக கடவுள் நம்பிக்கையால்தான், மத நம்பிக்கையால்தான் தனக்குப் பிரச்சனை என்று உணர்ந்திருக்கின்றார்.மெல்ல மெல்ல மத, கடவுள் நம்பிக்கையிலிருந்து வெளி வந்து நாத்திகராக மாறி, மனித நேயத்திற்கு , மனிதரை மனிதர் நேசிப்பதற்கு கடவுள் பற்றுத தடை என்று உணர்கின்றார். .தனது கடந்த கால கடவுள் நம்பிக்கை  ஒரு மன நோய் என்று உணர்கின்றார்.  

                                                           பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான ஒரு பெண் , அதற்குப்பின் மனம் சார்ந்த தொல்லைகளுக்கு உள்ளாவதற்கு Rape Trauma Syndrome என்று பெயர் .பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணுக்கு ஏற்படும் மன அழுத்தம் அதீதக் கொடுமையானது.  இந்தந்தொடர் எதற்கு பயன்படுகிறது என்றால் பாதிக்கப்பட்ட பெண் அந்த சூழலிருந்து மாறி, மறந்து வாழ்வதற்கான ஒரு சிகிச்சை முறை .. பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான பெண்ணின் உடல்,செயல்,வித்தியாசமான நடவடிக்கைகளைக் கவனித்து அதிலிருந்து அவர்களை மாற்றுவது, அவர்களுக்கு சிகிச்சை அளித்துக் காப்பாற்றுவது. அத்ற்குப் பெயர்  Rape Trauma Syndrome.

                                        டாக்டர் மர்லின் வினெல் , இதனைப் போலவே மத நம்பிக்கையால் ஒரு ஆண் அல்லது ஒரு  பெண் உடல், செயல், வித்தியாசமான நடவடிக்கைகளால் மிகப்பெரிய மன அழுத்ததிற்கு உள்ளாகின்றார்கள். அறிவியல் சொல்லும் உண்மைக்கு மாறான மதங்களை, அதன் சடங்குகளை மனதார ஒத்துக்கொள்ள முடியவில்லை. அதே நேரத்தில் மத நம்பிக்கையிலிருந்து விடுபடவும் முடியவில்லை . அப்படிப்பட்டவர்கள் மதம் என்னும் நோயிலிருந்து, செயலிருந்து விடுபட்டு, மன அழுத்தம் இல்லாமல் நிம்மதியான வாழ்க்கை வாழ்வதற்காக பாடுப்டுகின்றார். மத நம்பிக்கையால் மனமுடைந்து , திகைத்து ,உண்மையா பொய்யா என குழ்ம்புகிறவர்களின் நிலைக்கு Religious Trauma Syndrome(RTS)  எனப் பெயர் கொடுத்திருக்கின்றார். அதிலிருந்து விடுபட பயிற்சியும் , சிகிச்சையும் அளிக்கின்றார். இன்னும் இந்த வலைத்தளத்தில் நிறைய இருக்கிறது. நேரமும், இணையமும் இருப்பவர்கள் படித்து இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதலாம்.

No comments: