Sunday 2 November 2014

மறக்க முடியாத மனிதநேய நிகழ்வாக...

மறக்க முடியாத மனிதநேய நிகழ்வாக...

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
முனைவர் வா. நேரு    
தலைவர், மாநிலப் பகுத்தறிவாளர் கழகம்
ஆனந்தரங்கம்பிள்ளை மாற்றுத் திறனாளிக்கான சிறப்பு பள்ளி, பிள்ளையார் சாவடி, புதுச்சேரி
தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழா என்பது நாம் கொண்டாடும் தனிப்பெரும் விழா. அறிவு பெற்றோம், உரிமை பெற்றோம், கல்வி பெற்றோம் , வாழ்வில் அனைத்தும் பெற்றோம் உன்னால் என்று ஒடுக்கப்பட்ட மக்கள் எல்லாம் கொண்டாடி மகிழும் திருவிழா நாள் தந்தை பெரியார் பிறந்த நாள். தந்தை பெரியாருக்குப் பின் நம்மை இன்று வழி நடத்தும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலக மெங்கும் மகிழ்ச்சி பொங்கும் நன்றித் திருவிழா நாளாக தந்தை பெரியார் பிறந்த நாள் கொண்டாடப்படுகின்றது. தந்தை பெரியாரின் 136-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு  ஆண்டு தோறும் நடத்தப்படும்  பெரியார் ஆயிரம் வினா-விடைப் போட்டியில் இந்த ஆண்டு ஒரு புதுமை புகுத்தப் பட்டது. அது பார்வையற்ற மாணவ-மாணவர்கள் பயிலும் பள்ளிகளில் நடத்துவது என்பது. திராவிடர் கழகத் தின் தலைவர் அய்யா ஆசிரியர் அவர் களின் வழிகாட்டுதலில் ,திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் மானமிகு வீ.அன்புராஜ் அவர்களால் திட்ட்மிடப்பட்டு, பெரியார் மணி யம்மை பல்கலைக் கழக உயராய்வு மையமும், பெரியார் பிஞ்சு இதழின் சார்பிலும்  நடத்தப்பட்ட போட்டி இது. மதுரையில் இரண்டு பள்ளிகளில் இந்த வினாடி வினாப்போட்டி நடத்தப்பட் டது. மதுரைக்கு நான் வந்து 20 ஆண்டுகள் ஆகின்றது என்றாலும் இந்த இரண்டு பள்ளிகளுக்கும் நேரில் சென்றதில்லை. கேள்விப்பட்டிருக்கின் றேன், நேரில் செல்ல வேண்டும் என்று நினைத்திருக்கின்றேன். ஆனால் செல்லவில்லை. மிகப்பெரிய வாய்ப் பாக பெரியார் ஆயிரம் வினா-விடைப் போட்டி அமைந்தது.
மதுரையில் சுந்தரராஜன்பட்டியில் அமைந்துள்ள இந்தியப் பார்வை யற்றோர் சங்கப்பள்ளிக்கும் மற்றும் பரவையில் உள்ள செண்ட் ஜோசப் பள்ளிக்கும்  முதலில் பார்வையற்ற மாணவ., மாணவிகள் படிக்கக் கூடிய வகையில் பிரெயில் முறையில் அமைந்த புத்தகங்கள் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் உயராய்வு மையத்தின் சார்பாக அந்தந்தப் பள்ளிகளுக்கு அனுப்பப் பட்டன. வாழ்க்கையில் சாதியாலோ, மதத்தாலோ பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்படுபவர்கள் தந்தை பெரி யாரின் மனித நேயத்தத்துவத்தைக் கேள்விப்பட்டவுடன் நன்றாகப் பற்றிக் கொள்வதுண்டு. தந்தை பெரியார் கொள்கை வழியில் தொடர்வதுண்டு. அதனைப்போலவே மாற்றுத் திறனாளி களாக ஆனால் தன்னம்பிக்கை மிகுதி யாக உள்ள பார்வையற்ற மாணவ-மாணவிகள் தந்தை பெரியாரின் கருத்துக்களை கற்பூரம் தீயில் பற்றிக் கொள்வதுபோல பற்றிக் கொண் டார்கள் என்பது அவர்கள் பதில் அளித்த முறையில் தெரிந்தது. பார்வை யற்ற மாணவ-மாணவிகளுக்கு எழுத்துத் தேர்வில் வழிகாட்டுபவர் களாக  வந்த சின்னையாபுரம் தேவ சகாயம் -அன்னத்தாயம்மாள் மேல் நிலைப்பள்ளி மற்றும் மதுரை -பசுமலை தேவசகாயம் மெட்ரிகுலேசன் பள்ளி களிலிருந்து வந்த ஆசிரியப் பெருமக்கள் , தங்கள் வாழ்வில் மறக்க முடியாத நாளென்றும், மிகப்பெரிய வாய்ப்பு என்றும், பார்வையற்ற மாணவர்கள் தங்களை பெரியாரின் பேரப்பிள்ளைகள் என்றும் பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றுவோம் என்றும் மற்றும் அந்த மாணவ, மாண விகளின் ஒழுங்குமுறை, தன்னம் பிக்கை, ஜெயித்துக் காட்டுவோம் என்ற திண்ணிய எண்ணத்தோடு வாழும் அவர்களின் நேர்முக மனப்பானமை போன்றவற்றை எல்லாம் சுட்டிக்காட்டி அந்தப் பள்ளி களின் தாளாளர் திராவிடர் கழகத்தின் தலைமைச்செயற்குழு உறுப்பினர் அய்யா தே.எடிசன்ராசா அவர்களுக்கும், இந்தப் போட்டியை நடத்திய பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திற்கும், பெரியார் தொண்டர்களுக்கும் தங்கள் நன்றி என்று குறிப்பிட்டிருந்தார்கள்.
மதுரை சுந்தரராஜன் பட்டியில்....
14.09.2014 அன்று காலையில் 10 மணியளவில் மதுரை சுந்தரராஜன் பட்டி மற்றும் பரவையில் உள்ள செய்ண்ட் ஜோசப் பார்வையற்றோர் பள்ளிகளில் பெரியார் ஆயிரம் வினா-விடைப் போட்டிகள் நடத்தப்பட்டன. மதுரை பரவையில் உள்ள செண்ட் ஜோசப் பார்வையற்றோர் பள்ளியில், மதுரை மாநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சுப.முருகானந்தம் தலை மையில் , இயக்க தோழர்களும், இயக்கத் தோழர்களின் குழந்தைகளும், தேர்வு எழுதிய 25 பேருக்கும் வழி காட்டிகளாக இருந்தார்கள். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு.சதீஷ் அவர்கள் பல்கலைக் கழகத்தின் சார்பாக கலந்து கொண்டு தேர்வினை நடத்தினார். . கலந்து கொண்ட ஒவ்வொருவரும் பெருமை கொண்டார்கள், உவகை கொண்டார்கள். அதனைப் போல மதுரை சுந்தரராஜன் பட்டியில் உள்ள இந்தியப் பார்வையற்றோர் சங்கப் பள்ளியில் சின்னையாபுரம் மற்றும் பசுமலை பள்ளியைச்சார்ந்த ஆசிரியர்களும், விடுதலை வாசகர் வட்டச்செயலாளர் அ.முருகானந்தம் தலைமையில் பத்து பேரும் மற்றும் திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் வே.செல்வம், தோழர் சண்முகசுந்தரம் , பா.சடகோபன், சொ.நே. அன்புமணி ஆகியோரும் தேர்வு எழுது பவர்களுக்கு உறுதுணையாக செய லாற்றினர். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகப் பேராசிரியர் எழிலரசன் அவர்கள் தேர்வினை நடத்தினார்.  தேர்வு எழுதிய 51 மாணவ மாணவி யர்கள், பிரேயலி முறையில் கொடுத்த தந்தை பெரியார் பற்றிய புத்தகத்தை கரைத்துக் குடித்திருந்தார்கள். கேள்வி களை ஒருமுறை கேட்டவுடனேயே டக் டக் என்று பதில் கொடுத்தனர். உதவியாக இருந்த அனைவரும் அவர்களின் ஆற்றல் கண்டு வியந்தனர். நிகழ்ச்சி முடிந்தவுடன் பேசிய மாணவ, மாணவி கள் பலரும் பெரியார் பற்றி, இந்தத் தேர்வு பற்றியும்  தங்கள் கருத்துக்க்ளைக் கூறினர் ,பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் திரு. ரமணி அவர்கள், தந்தை பெரியாரின் தத்துவம் என்பது மனித நேயத்தத்துவம், எங்கள் மாணவர்கள் தந்தை பெரியாரை எளிதில் உள்வாங்கிக் கொள்வார்கள், சாதாரணமானவர்களிடம் தந்தை பெரியார் பற்றிச்சொன்னால் 10க்கு ஒருவர் அதனை ஏற்கலாம், ஆனால் இவர் களிடம் தந்தை பெரியார் பற்றி 10 பேரிடம் சொன்னால், 9 பேர் அதனை ஏற்றுக் கொள்வார்கள் என்று குறிப்பிட்டார். தந்தை பெரியாரின் 136- ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி பார்வையற்ற மாணவ- மாணவிகளிடம் பெரியார் ஆயிரம் வினாவிடைப் போட்டியை நடத்த வேண்டும் என்று நமது தலைமை முடிவு செய்தது எவ்வளவு தொலை நோக்கு என்பது அப்போது எனக்குப் புரிந்தது.
பரிசளிப்பு விழா
16.09.2014 மாலை 5 மணியளவில் , மதுரை பரவையில் உள்ள செண்ட் ஜோசப் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அண்ணன் வீ.அன்புராஜ் அவர்கள், அந்த மாணவ -மாணவிகளிடம் தேர்வு பற்றியும் , தந்தை பெரியார் பற்றியும் சில கேள்வி களைக் கேட்டார். மிகவும் ஆர்வமாக அந்தக் குழந்தைகள் பதில் கூறினர். தேர்வில் கலந்து கொண்ட அனை வருக்கும் தந்தை பெரியாரின் 136-ஆம் நாள் பிறந்த நாள் விழா என்று அச்சிடப் பட்ட அழகிய பைகள் வழங்கப் பட்டன. அந்தப் பள்ளியில் பயிலும் 90 மாணவ - மாணவிகள், ஊழியர்கள் 20 பேருக்கும் என அனைவருக்கும் இனிப்புப் பொட் டலங்கள் , திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே. எடிசன் ராசா அவர்களால் வழங்கப் பட்டன.  அடுத்த ஆண்டு இன்னும் அதிகம் பேர் இந்தப் போட்டியில் கலந்து கொள்வோம் என்று உற்சாகமாக் அந்தக் குழந்தைகள் கூற அடுத்த பள்ளியை நோக்கிப் பயணித் தோம்.
16.09.2014 மாலை 6 மணியளவில், மதுரை சுந்தரராஜன் பட்டியில் உள்ள இந்தியப் பார்வையற்றோர் சங்கக் கட்டிடத்தில் பெரியார் ஆயிரம் வினா-விடைப் போட்டி பரிசளிப்பு விழா நடை பெற்றது. பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் திரு.ரமணி அவர்கள் 30 ஆண்டுகளுக் கும் முன்னால் திரு.ஜின்னா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, இன்று பிரமாணடமாக நடைபெறும் பார்வையற்றோர் பள்ளி யின் வரலாற்றைச் சுருக்கமாகச் சொன் னார். . திராவிடர் கழக்த்தின் தலைமைச் செயற் குழு உறுப்பினர் தே.எடிசன்ராசா அவர்கள் தனக்கும் இந்தப் பள்ளிக்குமான தொடர்பு 25 ஆண்டுகளுக்கும் மேலானது என்று சுட்டிக் காட்டி உரையாற்றினார்.  தந்தை பெரியார் பற்றியும் , நடந்த தேர்வு பற்றியும் , அடுத்த ஆண்டு இதனைப் போல நடத்த வேண்டும் என்று கேட்டும் மாணவ, மாணவிகள் உரையாற்றினர். போட்டியில் பங்குபெற்ற மாணவர்களின் சார்பாக பாண்டியராசன் என்னும் மாணவர் "14.09.2014, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பெரியார் ஆயிரம் போட்டித் தேர்வு மிகுந்த சந்தோசத்தைக் கொடுத் தது. இந்தத் தேர்வுக்கு முன்னதாகப் பெரியாரைப் பற்றி நிறையத் தெரியாது. இப்போது முழுமையாகத் தெரிந்து கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. பெண் கல்விக்கும், கல்விக்கும் எவ்வளவு முக்கி யத்துவம் கொடுத்தவர் பெரியார் என் பதும், மனிதநேயத் தலைவர் பெரியார் என்பதையும் அறிந்து கொண்டோம்.
நாங்களெல்லாம் பெரியாரின் பேரப் பிள்ளைகள். பெரியார் வழியான மனித நேயத்தைப் பின்பற்றுவோம். பிராமணர் கள்  நம்மைக் கல்வி கற்க அனுமதிக்க வில்லை. ஜாதி ஏற்றத்தாழவு நம்மை இழிவுபடுத்துகிறது. வைக்கம் வீரர் பெரியார் சாதியை ஒழிக்கப்பாடுபட்டார். இந்தத் தேர்வு மிக நன்றாக இருந்தது. எங்கள் புத்தகமான பிரேய்லி மொழி யில் படிக்க வாய்ப்புக் கொடுத்தீர்கள். நன்றி. ஆண்டுதோறும் இந்தப் போட் டியை நடத்த வேண்டும்" என்றார். மாணவர் ரோசன்  "தடம் பார்த்து நடப்பவன் மனிதன், ஆனால் தடத்தைப் பதிப்பவர் மாமனிதர். அப்படிப்பட்ட மாமனிதர் பெரியார். மனித நேயமிக்க மாமனிதர் பெரியார். அவர் வழி நடப்போம். இந்தத் தேர்வு நடத்தியதற்கு நன்றி" என்றார். மாணவி ஷாலினி "எங்களுக்கு இப்படிப்பட்ட தேர்வு நடப்பது அபூர்வம். நடத்தியதற்கு நன்றி . இவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஒரு புது அனுபவமாக இருந்தது. பெரியார் அவர் களைப் பற்றி அறிந்து கொண்டோம்." என்றார். எல்.பாண்டிச்செல்வி என்னும் மாணவி "இந்தப் போட்டி நடத்தியதற்கு. நன்றி, நன்றி. மதத்தை, ஜாதியை வெறுத்தவர் பெரியார். அவர் போல நாமும் நடப்போம்" என்றார், எஸ்.விக் னேஸ் என்னும் மாணவர் "மாநிலம் முழுவதும் எங்களைப் போன்றவர் களுக்கு நடத்தியிருக்கின்றீர்கள். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. பகுத்தறிவாளர் களாக நாங்கள் மாற வழி காட்டியிருக் கின்றீர்கள். தொடர்ந்து பெரியாரைப் படிப்போம் . போட்டி நடத்தியதற்கும், பரிசு அளித்தற்கும் மிக்க நன்றி " என்றார்.  நிகழ்வினை திராவிடர் கழகத்தின் மாநில அமைப்புச்செயலாளர் வே.செல்வம் ஒருங்கிணைத்தார். பரிசுத்தொகையினை திரு.வீ.அன்புராஜ், தே.எடிசன்ராசா, பொறியாளர் சி. மனோகரன், முனைவர் வா. நேரு  ஆகியோர் வழங்கினர். முடிவில் பள்ளியில் பயிலும் 335 மாணவ, மாணவிகள், 75 ஊழியர்கள் உள்ளிட்ட அனைவ்ருக்கும் இனிப்பு பொட் டலங்கள் வழங்கப்பட்டன. பங்கு பெற்ற அனைவருக்கும் பெரியார் பட்டம் போட்ட பள்ளிப் பைகள் வழங்கப் பட்டன. முடிவில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பவுனுத்தாய் நன்றி கூறினார். இந்தப் பள்ளியின் நிறுவனர் ஜின்னா அவர்களின் மறைவிற்குப் பின்னும் மிக நன்றாக பார்வையற்றோர் பள்ளியை நடத்திவரும் திருமதி ஜின்னா, ஜின்னாவின் மகள் ஆகி யோரை சந்தித்து திரு,வீ.அன்புராஜ் அவர்கள் உரையாடி நன்றி தெரி வித்தார்.
மனிதநேயம் என்றால் பெரியார்!
மனிதநேயம் = பெரியார் என்ப தனை நாம் அறிவோம். ஆனால் பெரியாரின் மனித நேயத்தை பெரி யாரின் தொண்டர்கள் வழியாக மற்றவர்கள் அறிவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த பார்வையற்றோர்களுக்கான பெரியார் ஆயிரம் போட்டி அமைந்தது. தமிழகம் முழுக்க 12 பார்வை யற்றோர் பள்ளிகளில் இந்தப் போட்டி நடந்துள்ளது. தஞ்சை மாவட்டத்திற்கு சென்ற நேரத்தில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் துணைத்தலைவர் அழகிரிசாமி அவர்களும், பகுத்தறி வாளர் கழக மாவட்டப் பொறுப் பாளர்கள்  கோபு.பழனிவேல், காமராஜ், அழகிரி ஆகியோர் தஞ்சை மாவட் டத்தில் நடந்த பெரியார் ஆயிரம் வினாவிடைப் போட்டியில் 6000-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்துகொண்டதை,
மாநிலத்திலேயே தங்கள் மாவட்டம் முதன்மை என்று  உற்சாகமாக கூறி னார்கள். அதற்காகத் தாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகளைக் கூறினார்கள். பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரின் முகத்திலும் வெற்றிப் பெருமிதமும், தந்தை பெரியாரின் கருத்துக்களை இளைய தலைமுறையிடம் எடுத்துச் செல்ல களப்பணியாற்றியிருக்கிறோம் என்ற  உணர்வும் தெரிந்தது. மன்னார் குடியில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் வேதாரணியத்தை சார்ந்த மண்டலத் தலைவர் அய்யா  முருகையன் அவர்கள் நாம் பத்து கூட்டம் போட்டு வரும் பலனை விட ஒரு பள்ளியில் நடத்தும் பெரியார் ஆயிரம் வினா-விடைப் போட்டி அதிகப்பலனைத் தருகின்றது என்றார். உண்மைதான் அதிக விளைவைத் தரும் அருமை யான திட்டமாக பெரியார் ஆயிரமும், பெரியார் ஆயிரம் பார்வையற்ற மாணவர்களுக்கான போட்டிகளும் .. ஒவ்வொரு மாவட்டமும் போட்டி போட்டு மாணவ-மாணவிகளை பெரியார் ஆயிரம் வினா-விடை எழுத வைத்திருக்கின்றார்கள். பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் அத்தனை தோழர்களுக் கும். மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்து நிகழ்வினை வெற்றியாக ஆக்கி யிருக்கும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத் துணைவேந்தர் அய்யா நல்.இராமச்சந்திரன் அவர்களுக்கும், கல்வியாளர் திருமதி பர்வீன் அவர் களுக்கும் மற்றும் இந்த நிகழ்வில் வெற்றிச் சங்கிலித் தொடரில் ஒவ்வொரு கண்ணியாக இருந்து பணியாற்றிய அத்தனை பெருமக்களுக்கும்  நமது நெஞ்சம் நிறைந்த நன்றிகள். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திலிருந்து தேர்வு நடத்துவ தற்காக ஒவ்வொரு ஊருக்கும் வ்ந்த  பேராசிரியர்கள் மிகச்சிறப்பாக தேர்வினை நடத்தினார்கள். மிகப் பெருந்தன்மையாக நடந்து கொண்டார்கள். தேர்வு எழுதியவர்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் கூட கடந்த 32 ஆண்டுகளாக, 1983-லிருந்து இயக்கத்தின் பல்வேறு செயல்பாடுகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டாலும், மிகவும் பெருமைப் படத்தக்க, மறக்க முடியாத மனித நேய நிகழ்வாக , பார்வையற்ற மாணவ், மாணவிகளுக்கு நடத்திய பெரியார் ஆயிரம் வினா-விடைப் போட்டி அமைந்திருந்தது என்றால் மிகை யில்லை.
நன்றி : விடுதலை 01-11-2014

4 comments:

Unknown said...

அறிவை விழியாக கொண்ட கண்மணிகளின் இணையால்லா திறனும் உள்ளத்து உறுதியும் நமக்கு புதிய வழியை காட்டுகிறது... ஆனந்தரங்கம்பிள்ளை அவர்கள நினைவாக நடத்தப்படும் அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் நடந்த விழா கூடுதல் பெருமையை அளிக்கிறது... ஆனந்தரங்கம் பிள்ளை அவர்கள் 18ம் நாற்றாண்டில் எழுதிய நாட்குறிப்பு தமிழக வரலாற்றில் தனி சிறப்பு பெற்றது... ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பு 12 தொகுதிகளாக பிரஞ்சு மற்றும் ஆங்கில மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.. இப் புத்தகத்தில் 18ம் நூற்றாண்டின் தமிழக பண்பாடு, அரசியல், பொருளாதாரம், மற்றும் கலாச்சார முறைகள் பற்றி பதிவு செய்ததில் முதன்மையான ஆவணமாகும்.

Yarlpavanan said...

சிறந்த பதிவு
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்

முனைவர். வா.நேரு said...

நன்றி செந்தில். "ஆனந்தரங்கம் பிள்ளை அவர்கள் 18ம் நாற்றாண்டில் எழுதிய நாட்குறிப்பு தமிழக வரலாற்றில் தனி சிறப்பு பெற்றது" . ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களைப் பற்றிய செய்திகளையும் இணைத்திருக்கின்றீர்கள். கருத்துரை மூலமாக நன்றி. அலைபேசியிலும் அழைத்து வாழ்த்தியமைக்கு நன்றி.

முனைவர். வா.நேரு said...

அய்யா, மிக்க நன்றி. தங்கள் வலைத்தளங்களைப் பார்த்தேன். மிகப்பெரும் தமிழ்த்தொண்டு ஆற்றும் வலைத்தளங்களாக இருக்கின்றன. தங்கள் வருகையும் கருத்தும் உவகையும் உற்சாகமும் அளிக்கின்றது. நன்றி .