Monday 8 February 2016

தன்னலமா ? பசு வழிபாடா? ....எம்.என்.ராய்

                                                           தன்னலமா ? பசு வழிபாடா?

அண்மையில் படித்த புத்தகம் : சிறைக்கைதிகளின் சிந்தனைத் துளிர்கள்
0ஆசிரியர்                                    :  அறிவுலக மேதை எம்.என்.ராய்
தமிழில் மொழிபெயர்த்தவர்    :   வை.சாம்பசிவம்
வெளியீடு                                  :   கங்கா-காவேரி, 18, காரியாங்குடி செட்டித்தெரு, வெளிப்பாளையம், நாகப்பட்டினம்-611 001
முதல் பதிப்பு                             :   2001   , மொத்த பக்கங்கள் 144 , விலை ரூ 35/=
மதுரை மைய நூலக எண்       :   140058

                                                                  பகுதி -2
பூனை கேட்பதாக எம்.என்.ராய் எழுதியிருக்கும் கருத்துக்கள் பல ஆண்டுகளுக்கு முந்தைய கருத்துக்கள்  என்றாலும் இன்றைக்கும் பொருந்தக் கூடிய, அதிலும் இந்தக் கால கட்டத்தில் மிகவும்பொருத்தமான கருத்துக்களாக இருக்கின்றன. பசுவை மட்டும் போற்றிப் புகழ்வது ஏன் ?அதனை மட்டும் கடவுளாகக் கருதுவது ஏன்  எனக் கேட்கும் பூனை அதற்கு விடையாக கூறும் கருத்து சிந்தனைக்குரியது. இதோ அந்தக் கருத்துக்கள்

" பொதுவாகவே பழங்கால சமுதாய நிறுவனங்களும் , மதச்சம்பிராதயங்களும் நெறியற்ற முறைகளை உட்கொண்டுதான் நிற்கின்றன. பசு-வழிபாடு என்பதும் அத்தகைய மடமையின் பிரதிபலிப்பே. ...தனிப்பட்ட தெய்வீகத் தன்மையொன்று பசுவினிடம் மட்டும் இருப்பதாக எந்தப் பகுத்தறிவு படைத்தவனும்  கூறமாட்டான். பேராத்மாவை எவ்வுயிரிலும் காணலாம் என்றிருக்குமானால், இந்திய ரிஷிகள் இந்த ஒரு மிருகத்தை மட்டும் ஏன் வணக்கத்திற்குரியதாகக் கொண்டார்கள் ?

 இந்துக்கள் மிருகங்களிடம் நடந்துகொள்ளும் முறையைக் கூர்ந்து கவனித்தால் மேற்சொன்ன தெய்வ நோக்கம் அவர்களிடம் இருப்பதாகக் கூறவே முடியாது. என் சொந்த அனுபவம் இதைத் தெளிவாக்கும். என்னுடைய (பூனையோட) இனத்தையே வைரியாக்கி வைத்திருக்கிறான் இந்தியன். அவனைப் பழமையும் ,மத உணர்வும் எந்த அளவிற்கு பற்றி நிற்கிறதோ அந்த அளவிற்கு என் இனத்தின் மேலுள்ள வெறுப்பும் மேலோங்கி நிற்கும். இந்திய சனாதனி என்னை நடத்தும் முறையைக் கூர்ந்து கவனித்தால் மேற்சொன்ன தெய்வ நோக்கம் அவர்களிடம் இருப்பதாகக் கூறவே முடியாது. என் சொந்த அனுபவம் இதைத் தெளிவாக்கும்.

இந்திய சனாதனி என்னை நடத்தும் முறையை எண்ணினால் நெஞ்சையே வேகவைக்கும்; வேறு சில காரணங்களால்தான் என் இனத்தரின் வாழ்வு அவர்களுடைய கொடுமையினின்றும் பிழைத்து நிற்கிறது..... பூனைகள் மிகக் கெட்ட மிருகங்களாம். சாதாரண அன்பு காட்டக்கூட தகுதியற்றவைகளாகம்.காரணம் அவைகள் உயயோகமற்றவை என்பதுதான். பூனைகளால் யாருக்கும் எவ்வித நன்மையும் இல்லை என்று கூறியதைப் பலமுறை கேட்டிருக்கிறேன்.

இவ்வளவும் உணர்ந்த பின்பு , பசு வழிபாட்டுக்குக் காட்டும் பெரியதோர் விளக்கத்தை நான் எப்படி நம்ப முடியும் ?  சனாதன இந்தியர்களால் வெறுத்து ஒதுக்கப்படும் பட்டியலில் இடம் பெறும் மிருகங்கள் எத்தனையோ உண்டு ." எல்லாம் அவன் மயம், எவ்வுயிரிலும் அவன் இருக்கிறான் " என்ற தத்துவம் உண்மையானால், இந்தியர்களின் நடத்தையிலே இப்படிப்பட்ட முரண்பாடு இருக்க நியாயமே இல்லை.ஆகையால் பசு வழிபாடு என்பது பரந்த தத்துவ விளக்கம் அல்ல; சொந்த இலாபக் கணக்கை உட்கொண்டதுதான்!. உண்மையில் அதில் தத்துவமே இல்லை- தமக்குத்தேவை என்பதைத் தவிர உயர்த்திப்பேசப்படும் இந்திய ஆதிமீக ஜோதியில் இதுவும் இடம் பெற்றிருக்கிறது !

இந்துக்களின் வழிபாட்டு முறையிலே பசு எப்படி வந்து சிக்கிக்கொண்டது என்பதை மத ஆராய்ச்சியாளர்களும் வரலாற்று ஆசிரியர்களுந்தான் கூற வேண்டும். இருந்தாலும் பூனையின் சிற்றறிவிற்கு எட்டிய ஒரு கருத்தைக் கூற விரும்புகிறேன்.

வணங்கி வழிபடுவது சமுதாய்த் தேவையில் இருந்து பிறந்ததே. ஒரு காலத்தில் இந்திய மண்ணில் கால் நடைகள் இல்லாமல் இருந்தன. குறைந்த அளவில் இருந்த கால் நடையை பாதுகாக்க மக்கள் முற்பட்டார்கள். ஆனால் அங்கு வாழ்ந்த ஆரியர்களோ , மாட்டு இறைச்சி தின்பவர்கள். இந்த நிலையில் குறைந்த அளவில் இருந்த அந்த கால் நடைகளுக்கு நிரந்தமான தலைவலி இருந்துகொண்டே இருந்தது. இந்தியாவின் புனிதமான புராதண ஏடுகளில் , மாட்டிறைச்சி தின உணவாக இருந்ததென்பதற்கான ஆதாரங்கள் பற்பல உண்டு. இந்த இந்தியாவின் ஆத்மீகச்சொத்து  மாட்டிறைச்சி தின்று சோமபானம் குடித்து வாழ்ந்த அன்றைய ரிஷிகள் உருவாக்கியதுதான் என்பதும் உண்மை. ...

.சமுதாயத்தில் உற்பத்தியைப் பெருக்கும்வகையில் , மனிதனைவிட மாடுகள் அதிகப் பயனுள்ளவை. உணவுக்குப் பயன்படுவதைக் காட்டிலும் உற்பத்தியைப் பெருக்க அவை அதிக அளவில் பயன்பட்டன. ஆகவே , இன்றியமையாத தேவை இணையற்ற தெய்வத்தன்மையாக மாற்றப்பட்டது. அறிவற்ற மக்கள் மத அடிப்படையல்தானே எதையும் நினைக்க முடியும். மனித இனத்திற்கு உழைத்துச் சாகவேண்டும் என்ற உன்னதமான தத்துவத்தின் அடிப்படையில்தான் , ம்மாட்டினத்தை உணவாக்கித் தின்றுவிடாமல் உயிர் வாழ விட்டார்கள்! பசுவைப் புனிதத்தாய் என்ற அளவுக்கு வைத்து அதன் இறைச்சியை இரையாக்கிக் கொல்லாமல் விட்டதுகூட , அது அதன் கன்றுகளுக்குத் துரோகம் செய்து மனிதனுடைய தன்னலத்தைக் காக்குமே என்பதற்காகத்தான்!.

அந்த பரிதாபத்திற்குரிய மாட்டினத்தைப் பார்த்து ' திடீர்ச்சாவா ? அல்லது தேய்ந்து தேய்ந்து மாயும் நீண்ட வாழ்வா ? இரண்டில் எது வேண்டும் ? " என்று கேட்டுப்பாருங்கள். என்னுடைய உறவினமான மாட்டினம் என்னைப்போல புத்திசாலித்தனமான பதிலைத்தான் கொடுக்கும். கொழுத்து வளர்ந்து சில காலம் சிறக்க வாழ்ந்து மடிவது , நீண்ட கால்த் தொல்லை வாழ்வை விட மிக மிக மேலானது என்ற பதில்தான் கிடைக்கும். (பக்கம் 23,24,25,26)

  

No comments: