Sunday 6 March 2016

தோழமை பிறக்கிறது .....

தோழமை பிறக்கிறது .....


எப்போதும் ஒரு 
தோழமை பிறக்கிறது
அவரைக் காணும் 
நேரமெல்லாம் !

நெடு நாளாய் ஒரே
துறையில் பணி என்றாலும்
எங்கு பிறந்தவர்
எங்கு வளர்ந்தவர்
எவரோடு வாழ்பவர்
எனும் தரவுகள்
எதுவும் இல்லை என்றாலும்
தோழமை பிறக்கிறது
அவரைக் காணும் 
நேரமெல்லாம் 

நம்மால் முடிந்த 
உதவிகளை அவருக்கு 
செய்திடல் வேண்டும் 
எனும் உணர்வு பிறக்கிறது
அவரைக் காணும் 
நேரமெல்லாம்

என்னைப்போலவே
அவரும் துன்பப்பட்டவர்
இருதயத்தை கழட்டி
செயற்கை வால்வைப் பொருத்தி
இன்னுமொரு வாழ்க்கையைப் 
பெற்றவர் என்பதாலோ
என்னவோ
எப்போதும் ஒரு 
தோழமை பிறக்கிறது
அவரைக் காணும் 
நேரமெல்லாம் ....

இருவரைப் பிரிப்பதற்கான
கோபங்கள்
இருப்பது போலவே
இருவரை இணைப்பதற்கான
புள்ளிகளும் 
வித விதமாய் 
இருக்கின்றன.....

                             வா.நேரு , 06.03.2016

No comments: