Monday 7 November 2016

எதிர் வண்ணங்களால் தீட்டப்பட்ட சுவர்களிடம் ......

அவனோடு  தீவிரமாய்
நான் வாதிடும் நேரம்
அமைதியாக
அமர்ந்திருக்கிறாய் நீ !

பல நேரங்களில்
என்னை விட தீவிரமாய்
வாதிடும் நீ .....
என்னை விட இவர்களை
எதிர்ப்பதற்கான
காரணங்களை அதிகமாக
தெரிந்துவைத்திருக்கும் நீ.....
அமைதியாக அமர்ந்திருக்கிறாய்
என்றாய் ஆத்திரத்தோடு....
நீ என்னிடம் ....

'அரங்கின்றி வட்டாடிடும்'
நபர் அவர் என்பதை
நான் அறிவேன்....
நீ அறியாய்.....
கல்லுளி மாங்கனாய்
எதிர்தரப்பு .....

'யாரு கையைப்பிடிச்சு
இழுத்தா' எனும்
நடிகர் வடிவேலு வசனம் போல
திரும்பத் திரும்ப
கேள்வி கேட்கும்
அவனின் நோக்கமறியாது
பச்சைப் பிள்ளைக்கு
பாடம் எடுக்கும் குரலில்
மீண்டும் மீண்டும்
தரவுகளால் நிரப்புகிறாய்
உனது வாதத்தை.....

தூங்குபவன் யார் ?
தூங்குவது போல
நடிப்பது யார் ?
எனும் தன்மை அறிந்து
உன் வாதங்களை
அடுக்கு ....
வென்றெடுக்க
சில நேரம் வாய்ப்பிருக்கலாம்....

எதிர் வண்ணங்களால்
குழைத்து குழைத்து
தீட்டப்பட்ட
சுவர்களிடம்
ஏதும் பேசாமல்
கடந்து செல்வதே மேல்.....

                                --வா.நேரு -
                                   07.11.2016


2 comments:

Unknown said...

ji i have also read a kural....
whose meaning goes as follows...
well educated cultured people should avoid arguing with rude uncultured uneducated people... if you indulge in talking or arguing with them it amounts to spitting on our face by ourselves...

முனைவர். வா.நேரு said...

Thanks for the comment,sir. But this poem is about ideological opponent.