Monday 20 March 2017

சுகமான வாழ்வு.........

பெரியார் பன்னாட்டு மைய இயக்குநர் மருத்துவர் அய்யா சோம.இளங்கோவன், அவரது இணையர் மருத்துவர் அம்மா சரோஜா அவர்களும் இணைந்து அனுப்பிய வாழ்த்து

வெள்ளிவிழா காணும் வாழ்விணையர்களே!
வாழ்வின் சிறப்பை உழைப்பாலும் நட்பாலும்
பெருமையை பெரியாரின் கொள்கையாலும்
மகிழ்வை உங்கள் இருவரின் நட்பாலும்
செல்வங்களை மக்கள் செல்வங்களாலும்
பெற்றுள்ளீர் ! வாழ்வீர் நலமுடன்
வாழிய பல்லாண்டு! வாழிய பல்லாண்டு !

சரோ & சோம.இளங்கோவன்.


திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் , வாழ்க்கை இணையர்களாக நானும் தோழியர் சொர்ணமும் வாழ்க்கை ஒப்பந்தம் ஏற்றுக்கொண்ட நாள் இந்த நாள் (மார்ச் 20). 1993 மார்ச் 20-ஆல் இல்லற வாழ்க்கையைத் தொடங்கி , 24 ஆண்டுகள் முடிந்து 25-ஆம் ஆண்டு தொடங்கியிருக்கிறது. வாழ்வில் ஏற்படும் இன்பம், துன்பங்களில் உற்ற நண்பர்களாக வாழ்வோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டது வெறும் உறுதிமொழியாக இல்லாமல் நடைமுறை மொழியாகவே தொடர்கிறது. சனிக்கிழமை காலை வெவ்வேறு சாதிகளைச்சார்ந்த நாங்கள் இருவரும் வாழ்க்கை துணைவர்களாக இணைவதற்கு இருந்த எதிர்ப்புகள் எல்லாம் நேற்று நடந்ததுபோலவே மனக்கண் முன்னால் ஓடுகின்றது. 'சுயமரியாதை வாழ்வே சுகமான வாழ்வு ' என்பது வெறும் வார்த்தைகள் அல்ல, அப்படி வாழ முற்பட்டால் அது எவ்வளவு மகிழ்ச்சிகரமான வாழ்வு என்பதை அப்படி வாழ முற்பட்டால் எளிதாகப் புரிந்து கொள்ள இயலும்.

எங்களின் இணை ஏற்பு நாளை முன்னிட்டு , எனது பிள்ளைகள் சொ.நே.அன்புமணி, சொ.நே.அறிவுமதி இருவரும் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 2500 அளித்திருக்கின்றார்கள். கல்லூரிச்செலவுக்காக தினந்தோறும் நான் கொடுக்கும் தொகையில் மிச்சம் பிடித்து, இந்தத் தொகையை அளித்திருக்கின்றார்கள். இருவருக்கும் எங்கள் நன்றி. வாழ்த்துக்கள் தெரிவித்த அய்யா மருத்துவர் சோம.இளங்கோவன் அவர்களுக்கும் அவரது இணையர் மருத்துவர் சரோஜா அவர்களுக்கும் , மற்றும் உறவுகளுக்கும், நட்புகளுக்கும், இயக்க உறவுகளுக்கும் நன்றி..நன்றி...








             




நன்றி :விடுதலை 20.03.2017


No comments: