Friday 12 January 2018

உலக நாத்திகர் மாநாட்டின் சிறப்பு.........


திருச்சி உலக நாத்திகர் மாநாட்டின் சிறப்பு
பகுத்தறிவுக் கொள்கையை மக்கள் இயக்கமாக ஆக்கியிருக்கும்
திராவிடர் கழகத்தின் பணியைக் கண்டு உலக நாத்திகர்கள் பாராட்டு!
எல்லோருக்கும் எல்லாமுமான சமூகநீதியை முன்னெடுப்போம்!

கோவையில் தமிழர் தலைவர் அளித்த பேட்டி


கோவை,ஜன.10 எல்லோருக்கும் எல்லாமு மான சமூகநீதியை முன்னெடுப்பது என்ற உலக நாத்திகர் மாநாட்டின் பிரகடனத்தை செயல் படுத்துவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கோவையில் 8.1.2018 அன்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

ஜனவரி 5, 6, 7:


உலக நாத்திகர் மாநாடு

வணக்கம். கோவை செய்தியாளர் நண்பர் களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

கடந்த 5, 6, 7 ஆகிய நாள்களில் உலக நாத்திகர் மாநாடு திருச்சியில் மூன்று நாள்கள் சிறப்பாக நடந்து முடிந்தது. அதில், உலகத்தினுடைய பல பகுதிகளில் இருந்து, தெளிவாகப் பிரகடனப்படுத்திக் கொண் டிருக்கக்கூடிய நாத்திக அமைப்புகள், மனித நேய நன்னெறி அமைப்புகள் மிஸீtமீக்ஷீஸீணீtவீஷீஸீணீறீ ணிtலீவீநீணீறீ பிuனீணீஸீவீst கிssஷீநீவீணீtவீஷீஸீ  என்ற உலகம் முழுவதும் 150 கிளைகள் இருக்கக்கூடிய ஒரு பொது அமைப்பு - அதனுடைய தலைமையிடம், லண்டனிலும், பெல்ஜியம் நாட்டின் பிரஸல்ஸ் நகரிலும் உள்ளது.

அதனுடைய தலைமைப் பொறுப்பாளர் அம்மையார் ஓ’கேசி என்பவர். அதேபோல, இங்கிலாந்தில் அதற்கு மிகப்பெரிய அளவிற்கு பேச்சாளராக, கருத்தாளராக இருக்கக்கூடிய கேரி மெக்லேலண்ட் என்பவரும் அந்த நிறுவனத்தின் சார்பாக நடைபெற்ற மூன்று நாள் மாநாட்டில் கலந்துகொண்டார்கள்.

அதேபோல, அமெரிக்க, பெரியார் பன்னாட்டு அமைப்பு, அதுபோல, கனடா, இங்கிலாந்து, மலேசியா, குவைத் மற்றும் பல நாடுகளிலிருந்தும் பிரதிநிதிகள் ஏராளமாக வந்திருந்தார்கள்.

அரியானா, பஞ்சாப், மத்தியப் பிர தேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, தெலங் கானா, ஆந்திரா, கேரளா இப்படி பல மாநிலங்களிருந்து சுமார் 500 பேராளர்கள் வந்திருந்தார்கள். எல்லோரும் சேர்ந்து மூன்று நாள்கள், பல்வேறு வகையில் மதவாத தீவிரவாதங்கள் பரவிக்கொண்டு, ஜாதி வெறி, மதவெறி போன்ற அமைப்புகள் வளர்ந்துகொண்டிருக்கின்ற இன்றைய சூழலில், நாத்திகம் என்பதுதான் மனித நேயத்தை வளர்க்கக்கூடிய, மனித சமு தாயத்தை ஒன்றுபடுத்தக்கூடிய ஒரு சிறந்த தத்துவமாக - பெரியாருடைய தத்துவம் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய நாத்திக அமைப்புகள் எல்லோருமே இணைந்து, மனித குலத்தினுடைய சிறந்த நன்னம்பிக்கை என்ற அந்தக் கருத்தை மய்யமாக வைத்து, மூன்று நாள்கள் மாநாடு சிறப்பாக நடைபெற்றது. அத்துணை பேரும் மிகுந்த மகிழ்ச்சியோடு பல ஆய்வுக் கட்டுரைகளைப் படித்தார்கள்.  ஆய்வரங்கங்கள் நடைபெற்றன.

பிரகடனம் நிறைவேற்றப்பட்டது

முதல் நாள் தொடக்க விழாவில், பல்வேறு பேராசிரியர்கள், அறிஞர்கள் எல்லோரும் பங்கேற்றனர்.

சிறந்த நாத்திகராகவும், பகுத்தறிவாளராக வும் இருக்கக்கூடிய மேனாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்களும் கலந்து கொண்டார் முதல் நாளில். அதேபோல, மற்ற கருத்தாளர்களும் ஏராளமாக அம்மாநாட்டில் பங்கேற்றார்கள்.

இரண்டாம்நாள்மாநாட்டில்,நாடா ளுமன்ற உறுப்பினராகவும், திராவிட முன் னேற்றக் கழக மகளிரணி பொறுப்பாளராகவும் இருக்கக்கூடிய கவிஞர் கனிமொழி அவர் களும், எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களும் மற்ற தலைவர்களும் கலந்து கொண்டார்கள்.

அதேபோல, மூன்றாம் நாள் மாநாட் டில், பல, பேராசிரியர்கள், நாகநாதன்  போன்றவர்கள்; கருநாடகத்தில் இருக்கக் கூடிய சட்ட நிபுணர்கள் - மேனாள் அரசு தலைமை வழக்குரைஞர் ரவிவர்மகுமார் போன்றவர்கள் கலந்துகொண்டு, பிuனீணீஸீவீst ஞிமீநீறீணீக்ஷீணீtவீஷீஸீ என்ற ஒரு பிரகடனத்தை - தீர்மானமாக - பொதுவாக இதுபோல சர்வ தேச மாநாடுகள், பன்னாட்டு மாநாடுகள் - உலக மாநாடுகள் நடைபெற்றால், அந்த மாநாடுகளில் தீர்மானம் என்று நிறை வேற்றுவதில்லை. மாறாக, ஞிமீநீறீணீக்ஷீணீtவீஷீஸீ பிரக டனம் என்று சொல்வார்கள்.

எனவே, 2018 இல் நடைபெற்ற இம்மாநாட் டில், அத்துணை பெருமைகளும் கலந்து நிறைவேற்றப்பட்ட ஒரு தெளிவான பிரக டனம் என்னவென்று சொன்னால், மதவெறி, ஜாதி வெறி, தீண்டாமை போன்றவை இந்தி யாவை உலுக்கிக் கொண்டிருக்கின்றன.


எல்லோருக்கும் எல்லாமும் என்ற சமூகநீதி

உலகம் முழுவதும் இருக்கின்ற மக்கள் ஒன்றுபடுவதற்குப் பதிலாக, அவர்கள் பல் வேறு வகைகளில் பிரித்து வைக்கப்படுவது; அவைகளுக்கு வன்முறை மூலமாக கருத்துகளை, சகிப்பின்மை என்பதை ஏற்றுக்கொண்டு, மாற்றுக் கருத்துகளையே ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இல்லாத ஒரு சூழ்நிலை - இவைபற்றியெல்லாம் கவலை கொள்கிறது - எனவே, இதனை மாற்றி, ஒரு புத்தாக்கத்தை உருவாக்கவேண்டும். அதன் மூலம், எல்லோருக்கும் எல்லாமும் என்ற சமூகநீதி, பகுத்தறிவு அதேபோல, மனிதநேயம் இவையெல்லாம் வளர்க்கக்கூடிய அளவிற்கு இந்தத் தத்துவங்கள் பரவவேண்டும் என்று சொன்னார்கள்.

அதாவது சுருக்கமாக சொன்னால், இந்தத் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட தத்துவம்தான், திராவிட நெறி - திராவிடத் தத்துவம்  என்பதைத் தெளிவாக எடுத்துச் சொன்னோம்.

‘‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்!’’

‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘’

‘‘அனைவருக்கும் அனைத்தும்‘’

சுயமரியாதை இயக்கத்தினுடைய, பெரியார் அவர்களுடைய கொள்கைத் தத்துவம்.


மக்கள் இயக்கமாக இருக்கிறது

இதை அவர்கள் வெகு அளவிற்குப் பாராட்டினார்கள். அடுத்தடுத்து இந்தியா முழுவதும் இப்படிப்பட்ட பல்வேறு சமூகநீதிக்கான வாய்ப்புகளை உருவாக்கவேண்டும் என்று சொல்லி, அவர்கள் உரையாற்றும்பொழுது, அவர்களுடைய நாட்டில், நாத்திகம், பகுத்தறிவு அமைப்புகள் என்பது ஓர் அரங்கத்தில் இருக்கக்கூடிய ஓர் ஆய்வரங்கமாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில்தான், தந்தை பெரியார் அவர்களுடைய முயற்சியினால், அது ஒரு மக்கள் இயக்கமாக இருக்கிறது என்பதை பார்த்து வியந்தனர்.

எனவேதான், உலக நாத்திகர் மாநாட்டிற்கு குடும்பம் குடும்பமாக வந்திருந்தார்கள்; இருபாலரும் வந்திருந்தார்கள்; குழந்தைகளோடு வந்திருந்தார்கள். எனவே, ஒரு புதிய திருப்பம் - மக்கள் மத்தியில். குழந்தைகளுக்கும் பகுத்தறிவு உணர்ச்சி ஊட்டப்படவேண்டும். நம்முடைய நாட்டின் பாடத் திட்டங்களில், மற்றவைகளில் அறிவியலைப் படிக்கிறோமே தவிர, அறிவியல் முறையில் வாழவில்லை.

பிரியா விடைபெற்றனர்

எனவே, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவேண்டும்; மூடநம்பிக்கைகளுக்கு இடமில்லாமல் இருக்கவேண்டும். ஆண் - பெண் என்ற பிறவி பேதம் இருக்கக்கூடாது; எல்லோருக்கும் சம வாய்ப்பு தரப்படவேண்டும் என்பதையே மய்யப்படுத்திய அந்தக் கருத்தரங்கத்தினுடைய செய்திகளை உலகளாவிய நிலைகளுக்கு எடுத்துப் போய், அந்தந்த நாடுகளிலும், அந்தந்த மாநிலங்களிலும் இந்தக் கொள்கையை வைத்துப் பரப்புவது என்று அவர்கள் பிரியா விடைபெற்றனர் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்த மாநாடு 7 ஆம் தேதி மாலையுடன் நிறைவுற்றது.

நன்றி : விடுதலை 10.1.2018

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ஐயா

முனைவர். வா.நேரு said...

அய்யா,வணக்கம். தங்களுக்கும் தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் நாள் வாழ்த்துகள்.